சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்களால் வில்லங்கம்!!

சீனாவில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.



தற்போதைய நிலையில் இவ்வாறான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது எச்சரிக்கைக்குரியதாகும். இந்நிலையில், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட 10 ஆயிரத்து 400 முகக் கவசங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று குறித்த இந்த தீவிரமான நிலையில் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வைத்திய ஆய்வு நிறுவனத்தின் அனுமதிபெறாமை குற்றமென அதிகாரசபையின் விற்பனை மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார கூறினார்.

இந்த வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.