நள்ளிரவில் மரக்கறி லொறியை வழிமறித்து கொள்ளை!!

மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட லொறியை வழிமறித்து நள்ளிரவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பல இலட்சம் ரூபாயை வியாபாரி இழந்துள்ளார்.


கம்பஹா – வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மரக்கறி லொறியொன்றை இடைமறித்து அதிலிருந்து நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக லொறியின் சாரதி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கெப்பட்டிப்பொல, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறிகளைச் சேர்ந்து வந்து அவற்றை வெயாங்கொடவில் விற்பனை செய்ததால் கிடைத்த பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த லொறியை இடைமறித்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும், நள்ளிரவு 12.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிடம் பணமில்லை எனக் கூறிய சாரதியை அச்சுறுத்தியே பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸாரும் ஹற்றன் கைரேகைப் பிரிவினரும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.