தெற்காசியாவிற்கான உலக வங்கி துணைத் தலைவர்- பிரதமர் சந்திப்பு!!

தெற்காசியாவிற்கான உலக வங்கி துணைத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு அனைத்துவிதமான ஆதரவுகளையும் வழங்க எதிர்பார்ப்பதாக உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலின் துயரத்தில் இருந்து  மீண்டெழுந்து வளர்ச்சி பாதையை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு உதவுவதாகவும் பிரதமருக்கு குறித்த சந்திப்பின்போது உலக வங்கியின் துணைத் தலைவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.