இலங்கை மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- சீன அரசாங்கம்!!

இலங்கையிலுள் சீன தூதுவராலயத்தின் தூதுவர் சென் ஜுவாங்குக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் மற்றும் கொரோனா வைரஸினால் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக பிரதமரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அப்போது அதற்கு பதிலளித்த சீன தூதுவர், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சீன அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

மேலும் வுஹான் மாகாணத்திற்கு ஒரு சிறப்பு விமானத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு  வருகின்றது.

இதேவேளை இலங்கையில் வாழும் சீன நாட்டினருக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த பிரச்சினை தாக்குதல் செலுத்தக்கூடாது.” என குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த, வுஹானில் வசிக்கும் இலங்கை மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நிலைமைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தினார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை பகிரும்போது பொறுப்புடன் செயல்படுமாறு பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பிரதமர் மஹிந்த, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.