யாழ். ஆயர் – அங்கஜனுக்கு இடையில் சந்திப்பு!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.


குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் செய்யக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக யாழ். மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக மக்களுக்குத் தேவையான கல்வி, மீன்பிடி மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்துறை நிபுணர்களைக் கொண்ட அபிவிருத்திக் குழு ஒன்று ஆயர் இல்லத்தினால் உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அங்கஜன் இராமநாதன், இதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு கல்வி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை ஆகியன முக்கியமான விடயம் எனவும், பொருளாதார அபிவிருத்தியூடாக தமிழ் மக்களுடைய அனைத்தையும் பெற முடியும் எனும் அடிப்படையில் ஆயருக்கும் அவருடைய குழுவுக்கும் தன்னுடைய ஆதரவை முழுமையாக வழங்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.