மன்னாரில் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரி!

மன்னார், மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரித் திடலில் இடம்பெற்ற மாபெரும் சவாரிப் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் யாழ். போட்டியாளர்களின் காளைகள் வெற்றிபெற்றுள்ளன.


மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சண்முகம் அமுர்தலிங்கத்தின் 2ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கின் பாரம்பரிய நிகழ்வான இரட்டை மாட்டு வண்டிச் சவாரி போட்டி இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்தப் போட்டி A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்றது.

குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.