திடீரென மயங்கி விழுந்த முதியவர் மரணம் - யாழில் சம்பவம்!!
உரும்பிராய் வடக்கு உரும்பிராய் பகுதியினை சேர்ந்த கதிரேசு ஸ்ரீதரன் வயது 55 என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.
நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து காலை 6.00 மணிக்கு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் வரை தோட்டத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன் போது மதியம் 1.00 மணி வரை வெயிலில் நின்று வேலை செய்துள்ளார். மதியம் 1.00 மணியளவில் குறித்த முதியவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதணைக்கு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo