விமானக் கொள்வனவில் நிதி மோசடி!!

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தேசிய விமான சேவை, விமானங்களை உற்பத்தி செய்யும் ஏர்பஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட பரிவர்த்தனையின்போது சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வார இறுதி ஆங்கில பத்திரிக்கை ஒன்றிலும் நேற்று இணையத்தளம் ஒன்றிலும் வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில் உடனடியாக முழுமையான விசாரணையொன்றை மேற்கொண்டு அதன் முடிவை தனக்கு அறியப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.