ரவியை முக்கிய பொறுப்பில் நியமிக்க ரணில் முயற்சி!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


எனினும், கூட்டணியின் சின்னம் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஐ.தே.கவின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய கூட்டணியில் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் சஜித்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் புதிய கூட்டணியின் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க ரணில் தரப்பு விரும்பியபோதும், சஜித் அதற்கு உறுதியான மறுப்பை தெரிவித்து விட்டதையடுத்து, ரவி கருணாநாயக்கவிற்கு கூட்டணியின் முக்கிய பொறுப்பொன்று வழங்கப்பட வேண்டுமென ரணில் வலியுறுத்திக் கேட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிய கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க, சஜித் தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அண்மையில் ஐ.தே.க செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட அஜித் பி.பெரேரா, சரத் பொன்சேகா, இம்தியாஸ் பகீர் மார்க்கர் மற்றும் ரோஸி சேனநாயக்க ஆகியோரை மீண்டும் செயற்குழுவில் இணைக்க ரணில் இணங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புதிய கூட்டணியின் சின்னம் குறித்த முடிவு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கப்படும் என சஜித் தரப்பிர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.