ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நன்றி தெரிவித்த பெண் அமைச்சர்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீன அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளதன் பயனாகவே வுஹான் நகரில் இருந்து 33 மாணவர்களை நாட்டுக்கு பத்திரமாக அழைத்துவர முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரில் அகப்பட்டிருந்த 33 இலங்கை மாணவர்களும் இன்று (01) காலை மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறான கைங்கரியத்தை நிறைவேற்றி வெற்றிகரமாக மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வந்த விமானப்படை மற்றும் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுகாதார அமைச்சில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை கட்டுப்படுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயற்படுவதால் இந்த சவாலை வெற்றிக்கொள்ள முடிந்தது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீன அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளதன் பயனாகவே வுஹான் நகருக்குள் பிரவேசித்து எமது மாணவர்களை அழைத்து வர முடிந்தது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 16 உறுப்பினர்கள் அடங்கிய அந்த நிர்வாகத்திற்கும் விமானப்படை மற்றும் இராணுவத்தினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

தாய் நாட்டுக்காக இந்த கடமையை நிறைவேற்றிய அனைவருக்கும் எனது நன்றி´ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.