ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் நாவலப்பிட்டியில் கைது!

நாவலப்பிட்டிப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுமிகள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிமன்ற பதில் நீதவான் அமில பிரசாத் சுமனபால உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு, ஐந்து சந்தேகநபர்களையும் நீதிமன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலைப்படுத்திய வேளை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நாவலப்பிட்டி பகுதியில் தாயுடன் 29, 24 வயதுடைய பெண்கள் மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியைச் சேர்ந்தவர்கள் என நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் திருமணமனவர்கள் எனவும் இருவரும் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.