கொரோனா தாக்கம் - ஹொங்கொங்கில் முதல் உயிரிழப்பு பதிவானது!

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான எல்லையை ஹொங்கொங் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளது.


சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஹொங்கொங் சென்ற 39 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து சென்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த நிலையில் சீனாவுக்கு வெளியே இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 425 பேர் உயிரிழந்துள்ளதுடன் சீனா முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,400ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.