யாழில் இருமொழிகளிலும் இசைக்கப்பட்ட தேசியகீதம்!

இன்றையதினம் இலங்கையின் 72வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் யாழ். மாவட்ட செயலகத்திலும் சுந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் மற்றும் சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்றிவைத்தார்.

அதனை தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரை இடம்பெற்று, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய பூங்காவில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.