இந்திய வான்பரப்பில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!!

கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. விமானம் இந்திய வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, விமானி அவரச மருத்துவ உதவியை நாடினார். விமானியின் அழைப்பையேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் அதிகாலையில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய கொல்கத்தா விமான நிலைய அதிகாரி, ``செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மருத்துவ உதவிக்காக விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. 3.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் விமானத்துக்கு உடனடியாக விரைந்தனர். ஆனால், நடுவானில் அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். குடிவரவு அனுமதிக்குப் பின்னர் 4.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 5.50 மணிக்கு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டது" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.