2 ஆயிரம் பயணிகளுடன் இலங்கை வரும் கப்பல் – கொரோனா தொற்று குறித்து பரிசோதனை!
சுமார் 2 ஆயிரம் பயணிகளுடன் இலங்கை நோக்கி கப்பல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த கப்பலில் இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் முழுமை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் முறையில் கப்பலில் வரும் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விமான நிலையம் ஊடாக வரும் பயணிகளில், விசேட அவதானம் தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பயன்படுத்தக் கூடிய வகையிலான திறன்பேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக உடனுக்குடன் குறித்த விசேட அவதானம் தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த கப்பலில் இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் முழுமை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் முறையில் கப்பலில் வரும் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விமான நிலையம் ஊடாக வரும் பயணிகளில், விசேட அவதானம் தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பயன்படுத்தக் கூடிய வகையிலான திறன்பேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக உடனுக்குடன் குறித்த விசேட அவதானம் தேவைப்படும் பயணிகளைக் கண்காணிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo