கம்பன் கழக நிகழ்வில் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கிய பட்டம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு தரம் மிகுந்த போராளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை கம்பன் கழகத்தினால் தரம் மிகுந்த போராளி (கம்பவாணர் அ.அருணகிரிநாதர்) எனும் பட்டம் கம்பன் கழகத்தின் இன்றைய நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கம்பன் கழக விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று இதன் இறுதி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்தே சுமந்திரனுக்கு இப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இந்தியாவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியன், இலங்கை முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.