துருக்கி விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு!!

துருக்கியில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள விமான நிலையத்தில் பீகஸஸ் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

183 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் ஓடுதளத்தில் காணப்பட்ட ஈரலிப்புத் தன்மை காரணமாக விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று துண்டுகளாக உடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக மூவர் உயிரிழந்ததுடன், ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த விபத்து குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.