பசில் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வியூகம்!!
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இப்படி போட்டியிடுவதால் வேட்புமனு பங்கீடு ,தேசியப்பட்டியல் எம் பி நியமனப் பகிர்வு உட்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் தேர்தலின் பின்னர் பங்காளிக் கட்சிகள் இணைந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெறலாமெனவும் கணிக்கப்படுவதாக தெரிகிறது.
இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ,தேசிய சுதந்திர முன்னணி ,ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தனித்தனியாக போட்டியிட வைத்து தேர்தலின் பின்னர் அவர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் வேட்பாளர்களாக போட்டியிட பலர் முன்வந்துள்ளமையும் தேசியப்பட்டியல் பெற பலர் காத்திருக்கும் சூழ்நிலையும் இந்த யோசனைகளுக்கான காரணமென தெரிகிறது.
இது குறித்து பெசில் ராஜபக்ச கட்சி முக்கியஸ்தர்களிடம் மந்திராலோசனைகளை நடத்தி வருகிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இப்படி போட்டியிடுவதால் வேட்புமனு பங்கீடு ,தேசியப்பட்டியல் எம் பி நியமனப் பகிர்வு உட்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் தேர்தலின் பின்னர் பங்காளிக் கட்சிகள் இணைந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெறலாமெனவும் கணிக்கப்படுவதாக தெரிகிறது.
இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ,தேசிய சுதந்திர முன்னணி ,ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தனித்தனியாக போட்டியிட வைத்து தேர்தலின் பின்னர் அவர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் வேட்பாளர்களாக போட்டியிட பலர் முன்வந்துள்ளமையும் தேசியப்பட்டியல் பெற பலர் காத்திருக்கும் சூழ்நிலையும் இந்த யோசனைகளுக்கான காரணமென தெரிகிறது.
இது குறித்து பெசில் ராஜபக்ச கட்சி முக்கியஸ்தர்களிடம் மந்திராலோசனைகளை நடத்தி வருகிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo