நெடுங்கேணியில் விபத்து - ஒருவர் காயம்!

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முல்லைதீவில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை வவுனியா நோக்கிச்சென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது பேருந்தின் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியைக் கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைதீவு நோக்கிபயணித்த கார் அவரை மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதசே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் நெடுங்கேணி போக்குவரத்துப் பொலிஸார் விபத்து குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.