பெருந்தோட்ட உரிமையாளர் கொலை சம்மந்தமாக இராணுவ வீரர் கைது!!

கொள்ளுபிட்டி - பித்தல சந்தி பகுதியில் வசித்த கோடீஸ்வர வர்த்தகரும் பெருந்தோட்ட உரிமையாளருமான அசோக தசநாயக்க கொலை விவகாரம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கொலை சம்பவமானது,

இரண்டு கோடி ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்ட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.