பதுளை கொலைச்சம்பவம் - கொலையாளி உறவினரா!!
பதுளையில் பெண் ஒருவரைக் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த தங்க நகைகளை அபகரித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர், ஏற்கனவே, பலமுறை உயிரிழந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தமையும், இவர் குறித்த பெண்ணின் உறவினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளைப் பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபர், தொழில் செய்து வந்த மொனராகலையில் வைத்தே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி பதுளை – கைலகொடையைச் சேர்ந்த ரவி கௌரிதேவி என்ற 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. அத்துடன் கண்காணிப் புக் கமெராக்களை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர், ஏற்கனவே, பலமுறை உயிரிழந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தமையும், இவர் குறித்த பெண்ணின் உறவினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளைப் பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபர், தொழில் செய்து வந்த மொனராகலையில் வைத்தே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி பதுளை – கைலகொடையைச் சேர்ந்த ரவி கௌரிதேவி என்ற 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. அத்துடன் கண்காணிப் புக் கமெராக்களை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo