வசந்த கரன்கொடவுக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்த உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.


2008ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று அதற்கான அழைப்பாணையை விடுத்துள்ளது.

இதேவேளை முன்னதாக இரண்டு தடவை அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் கடற்படைத் தளபதி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, கடற்படை தளபதி மற்றும் பதில் காவற்துறைமா அதிபர் ஊடாக வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 13 கடற்படை அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் , வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.