லயனல் குணதிலக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமனம்!

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக, இதுவரை அப்படையின் பிரதி கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய பொலிஸ் ஆணைக் குழு இன்று மாலைக் கூடி இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட, பயங்கரவாத தடுப்பு, பிரபுக்கள் பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்கள் தொடர்பில் விசேட தேர்ச்சி பெற்ற அதிகாரியான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் கடந்த 4 ஆம் திகதியுடன் தனது 41 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

இந் நிலையிலேயே இன்று மாலைக் கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலகவை அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக தெரிவு செய்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.