முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு -ஒருவர் காயம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரிக் கிராமத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் படுகாயமடைந்தவர் ஒரு காலை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு வியாபாரம் செய்யும் சூசைப்பிள்ளை புலேந்திரன் (வயது-42) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாபாரத்திற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை அவர் பிரித்தெடுக்க முயற்சித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.