ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி!!

இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்க அமெரிக்க அரசாங்கமானது 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.


ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரதானி அந்தோனி ரென்சுலீ இதனை தெரிவித்தார்.

ஆட்கடத்தலுக்கு எதிராக தாங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மனித விற்பனை என்பது நாட்டினுள்ளும் நாடுகளின் எல்லைகளூடாகவும் நிகழும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்றச்செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரையும் பாதிப்பதோடு, இலங்கை தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிட்டுள்ள தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.