புதையல் தோண்டிய 7 பேர் மட்டக்களப்பில் கைது!

சட்ட விரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாழைச்சேனை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கிரான் பூலாக்காடு பிரதேசத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ,கோமாகம மற்றும் கோரகல்லி மடு கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூசைப் பொருட்க்கள், மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.