அமேசன் நிறுவனம் ட்ரம்ப் மீது விசாரணை நடத்தக் கோரிக்கை!

மைக்ரோசொஃப்ற் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரிக்க வேண்டுமென அமேசன் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனை டிஜிற்றல் மயமாக்கும் 10 பில்லியன் டொலருக்கான ஒப்பந்தம், பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசொஃப்ற் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தைப் பெற அமேசன் நிறுவனமும் விண்ணப்பித்திருந்த நிலையில், மைக்ரோசொஃப்ற்றுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் கோபம் அடைந்த அமேசன் நிறுவனம் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பென்டகன் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு வொஷிங்டன் நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக அமேசான் நிறுவனம் புதிய மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்தது. இந்த மனுவில், ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசொஃப்ற் நிறுவனத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்ப் செயற்பட்டார் என அமேசன் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஒப்பந்த நடைமுறையில் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும், அமேசன் நிறுவனத்தை ஒழித்துக்கட்ட அவர் உத்தரவிட்டதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ், தற்போதைய இராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென இந்த மனுவில் அமேசன் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.