சிங்கப்பூரில் காலூன்றும் கொரோனா வைரஸ்- ஒரேஞ் எச்சரிக்கை அறிவிப்பு!

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக சிங்கப்பூர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது ஒரேஞ் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் – சீனாவுக்குச் சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 47 பேருக்கு சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிங்கப்பூர் அரசாங்கம் முதலில், மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்தது.

இந்நிலையில், சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர் வாசிகளுக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஒரேஞ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இதற்கு முன்னர், ‘ஸ்வைன் புளூ வைரஸ்’ பாதிப்பு இருந்த போது இத்தகைய நடவடிக்கையில் சிங்கப்பூர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.