இந்திய கடற்படையால் இலங்கை மீனவர்கள் கைது!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைதுசெய்துள்ளனர்.


மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதான மீனவர்களைப் படகுடன் கைதுசெய்து இராமேஸ்வரம் மெரைன் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவுசெய்த மெரைன் பொலிஸார் மீனவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.