இலட்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

கஹவத்த பொலிஸ் நிலையத்தின் வாகன போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரியொருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


குறித்த பொலிஸ் அதிகாரி சட்ட விரோதமாக பயணித்த லொறியொன்று தொடர்பில் வழக்கு தொடராமல் இருப்பதற்காக 25,000 ரூபா இலஞ்சம் கோரி 12,500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுள்ளார்.

மிகுதி 12,500 ரூபாவை பெறுவதற்காக சனிக்கிழமை மாலை வெல்லந்துதர பகுதிக்கு சென்றிருந்த போதே இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபர் சனிக்கிழமை பெல்மடுல்ல நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.