சிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா!!

சிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த நான்கு நாட்களாக சிரியாவிலிருந்து சுமார் 43 ஆயிரம் பேர் சண்டை நடந்து கொண்டிருக்கும் மேற்கு அலெப்போவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிரியாவின் பனி படர்ந்த முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சிரியாவில் உள்ள எந்த முகாமிலும் தற்போது பாதுகாப்பில்லை. அரசுப் படைகள் தங்கள் அத்துமீறல்களைத் தொடர்ந்து வருகின்றன. இதன்காரணமாக மக்கள் இன்னும் அதிகமாகக் கொல்லப்படுவார்கள்’ எனவும் குறித்த அறிக்கையில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90 ஆயிரம் பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.