மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி போராட்டம்

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்




மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று மன்னார் மனித புதைகுழிக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மன்னார் மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டத்தின் போது புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், அதற்குரிய நீதியான விசாரணை நடாத்தக் கோரியும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டை வலியுறுத்தியும் பொதுமக்கள் கோசங்களை எழுப்பி தமது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப் போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.