சீன நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க நிலைக்குழு இணக்கம்!!

சீனாவில் பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வருடாந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.


அதற்கமைய நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர்கள் நேற்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன நாடாளுமன்றத்தின் 3ஆவது வருடாந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது.

வழக்கமாக 2 வாரங்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுதல், புதிய கொள்கைகளை சேர்த்தல், புதிய சட்டங்கள் இயற்றுதல் ஆகிய பணிகள் நடைபெறும்.

எனினும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகமோசமாக இருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி முடிவுசெய்துள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.

இவ்வாறு நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைப்பது வழக்கத்திலேயே இல்லாதது, நாட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர், இது நடைபெறவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எனவே பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்த கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.