இளைஞர்களை கொடுமைப்படுத்தும் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு!!

புத்தளத்தில் இளைஞர்களை கடத்தி வைத்து கொடுமைப்படுத்தும் சித்திரவதை முகாம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


வென்னப்புவ, லுனுவில பிரதேசத்தில் உணவகம் ஒன்றினுள் இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட சித்திரவதை முகாம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்பு கிடைத்தவுடன் செயற்பட்ட வென்னப்புவ பொலிஸார் அந்த சித்திரவதை முகாம் நடத்தி சென்ற உணவகத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு 3 இளைஞர்கள் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சித்திரவதை செய்யப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் பொலிஸார் உணவகத்தை நெருங்கும் போது இளைஞர் ஒருவரை நாற்காலியில் கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட இளைஞன் பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்கும் போது,

“நல்ல நேரத்திற்கே வந்தீர்கள். இல்லை என்றால் என்னை கொலை செய்திருப்பார்கள். என்னுடன் மேலும் இருவருக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். என்னை விடுவிக்கவில்லை. என்னை காப்பாற்றியதற்கு இன்னும் ஒரு முறை பொலிஸாருக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்.

இவ்வாறு காப்பாற்றப்பட்ட 18 வயதுடைய இளைஞன் மற்றும் விடுவிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய இளைஞன் அச்சத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்

எப்படியிருப்பினும் இவ்வாறு இளைஞர்களை தாக்கிய சந்தேகநபர் அந்த பிரதேசத்தில் உள்ள பிரபல குற்றவாளியான ஓலூ மராவின் சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Blogger இயக்குவது.