மாணவிகளிடம் அத்துமீறிய வைத்தியர் மீண்டும் பணியில்!!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுடன் அத்துமீறி நடந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள வைத்தியர், அதே வைத்தியசாலையில் கடமையில் தொடர்ந்து வருகிறார்.


முல்லைத்தீவு பாடசாலையொன்றின் விளையாட்டு நிகழ்விற்காக உடற் தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகளுடன் எல்லைமீறி நடந்ததாக வைத்தியர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

வடக்கு சுகாதார திணைக்களம் நடத்திய உள்ளக விசாரணையில், மாணவிகளின் குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்ததால், குறிப்பிட்ட வைத்தியர் மீது வடக்கு சுகாதார திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு செய்யப்பட்டு பத்து நாட்களிற்கும் மேலாகி விட்டது.

சில நாட்கள் விடுப்பில் நின்ற வைத்தியர் மீண்டும் நேற்று முன்தினம் குறித்த வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இருபதுக்கும் அதிகமான மாணவிகள் முறையற்ற விதத்தில் உடற் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட வைத்தியர் மீது ஏன் நடவடிக்கையெடுக்கப்படவில்லையென்ற பரவலான அதிருப்தி துறைசார்ந்த வட்டாரங்களில் எதிரொலித்து வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.