மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாகக் கண்டெடுப்பு!!

மஸ்கெலியா சாமிமலை ஓயாவிலிருந்து ஆனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பிரவுன்ஸ்விக்  தோட்டத்தை சேர்ந்த சிலர் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணித் தோட்டத்தில் வசித்து வந்த 40 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையான சூரியகுமார் என்பவேரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.