இந்திய கடலோர காவல் படையினரால் 5 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐந்து மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களே இவ்வாறு கைதசெய்யப்பட்டுள்ளனர்.

தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் படையினர் ஐந்து மீனவர்களையும் கைதுசெய்துள்ளனர்.

மீனவர்கள் பயணித்த படகும் காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மீனவர்களை இராமேஸ்வரம் மெரைன் போலிஸாரிடம் காவல் படையினர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த மெரைன் பொலிஸார் அவர்களிடம் விசாரனை நடத்திவருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.