ஐ.நாவால் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த அதிர்ச்சி!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மற்றுமொரு விசாணை ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம்  தனது வெளியிட்டிருந்தது.


எனினும் அந்த நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் 43ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும்போது மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக  விசாரணை மேற்கொள்ளும் என நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருந்தார்.

உள்நாட்டு செயல்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன, எனவே மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை அமைப்பது என்பது இந்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை  எனவும் பச்லெட் இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, மேலும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும்   தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.