மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்!
இதன்போது, திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள குழுவின் அடுத்த கூட்டத்தில் மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறியும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைக்குமாறு குழு அலுவலர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.