மஹிந்த நாளை இந்தியா விஜயம்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளதாக பிரதமர் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Blogger இயக்குவது.