கொழும்பு வாழைத்தோட்டத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது!

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுற பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட, நீர்கொழும்பு, கம்புறுபிட்டிய மற்றும் பஸ்சர பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 6 கிராம் கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் வாழைத்தோட்டம் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.