மகளிருக்கான உலகக்கிண்ண தொடர் 21ஆம் திகதி ஆரம்பம்!


மகளிருக்கான உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதன்படி, இன்று முதல் உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சி போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி எதிர்கொள்கிறது.

இதேவேளை, இலங்கை மகளிர் அணி நாளை தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது
Blogger இயக்குவது.