பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பரிசோதகருக்கு அழைப்பு!


ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் தும்மலசூரிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தும்மலசூரிய தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது

அத்துடன் ஏப்ரல் 21 தாக்குலை நடாத்திய சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் தும்மலசூரிய தலைமையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.