சிவராத்திரியை முன்னிட்டு இரத்த தான முகாம்
சிவராத்திரி தினத்தை (21) முன்னிட்டு சைவ மகா சபை அறிவித்துள்ள சிவ வாரத்தின் ஓர் அங்கமாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
சைவ மகா சபையின் தலைமையகமான கீரிமலை சித்தர்பீடத்தில் இன்று வியாழக்கிழமை (20) காலை 9 மணிமுதல் இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
சிவதொண்டர்கள், தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை இதில் கலந்துகொண்டு உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்துகொண்டுள்ளனர்
.jpeg
)




