மொட்டு சின்னத்தில் களமிறங்குகிறார் ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரின் புதல்வன்!!
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் புரட்சியாளருமான அமரர் ரோகண விஜேவீரவின் புதல்வன் உவிந்து விஜேவீர எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் இணைந்து அவர் போட்டியிடுவார் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உவிந்து விஜேவீரவை அண்மையில் சந்தித்துள்ளார்.
இதன்போது பொதுத்தேர்தலில் தங்களது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு உவிந்து விஜேவீரவை இருவரும் கோரியதாக கூறப்படுகின்றது.
எனினும், உவிந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறித்த சந்திப்பில் ரோகண விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேவீரவும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அதாவது ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் இணைந்து அவர் போட்டியிடுவார் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உவிந்து விஜேவீரவை அண்மையில் சந்தித்துள்ளார்.
இதன்போது பொதுத்தேர்தலில் தங்களது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு உவிந்து விஜேவீரவை இருவரும் கோரியதாக கூறப்படுகின்றது.
எனினும், உவிந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறித்த சந்திப்பில் ரோகண விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேவீரவும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo