இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!!

சென்னையில் 23 வயது இளம் நடிகை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


23 வயது துணை நடிகையான பத்மஜா என்பவர் சென்னை திருவொற்றியூரில் கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக கணவர் குழந்தையுடன் ஆந்திரா சென்று விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தனியாக வாழ்ந்து வந்த பத்மஜா வீட்டிற்கு அவருடைய உறவினரான வாலிபர் ஒருவர் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருப்பதாக தெரிந்தது.

இதனை கண்டித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மனமுடைந்த பத்மஜா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை பத்மஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பத்மஜாவின் செல்போனில் அவர் அழுது கொண்டே தான் தற்கொலை செய்து கொள்ள செய்து கொள்ளப்போவதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பத்மஜா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற வாலிபர் யார்? என்றும் அவருக்கும் இந்த தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.