பிரபல நடிகரின் துப்பறியும் படத்திற்கு ஆர்யா வாழ்த்து!
கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் ’பெல்பாட்டம்’ ஜெயதீர்த்தா என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி மட்டும் ஹரிப்பிரியா நடித்திருந்தனர். துப்பறியும் கதையாக அமைந்துள்ள இந்த படம் கன்னட மொழியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. பெல்பாட்டம் என்ற அதே டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சத்யசிவா இயக்க இருப்பதாகவும் சார்லஸ் இமானுவேல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் இந்த டுவீட்டுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ்பாண்ட் போல் துப்பறிய வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் ஹீரோவுக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கின்றது. இந்த வேலையில் இருந்து கொண்டே அவர் மிகப்பெரிய குற்றத்தை கண்டுபிடித்துவிடுவார். அதனால் அவருடைய புகழ் பரவும். இந்த நிலையில் தான் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே நடக்கும் ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க ஹீரோ துப்பறிவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காதலும் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்ப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. பெல்பாட்டம் என்ற அதே டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சத்யசிவா இயக்க இருப்பதாகவும் சார்லஸ் இமானுவேல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் இந்த டுவீட்டுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ்பாண்ட் போல் துப்பறிய வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் ஹீரோவுக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கின்றது. இந்த வேலையில் இருந்து கொண்டே அவர் மிகப்பெரிய குற்றத்தை கண்டுபிடித்துவிடுவார். அதனால் அவருடைய புகழ் பரவும். இந்த நிலையில் தான் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே நடக்கும் ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க ஹீரோ துப்பறிவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காதலும் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்ப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo