மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சன்ன டி சில்வா இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு பொது தேர்தலை நடத்துவத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் தினத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு இடம்பெறுவதுடன் அதனைத் தொடர்து தேர்தல் நடைபெறும் தினமும் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுவினர் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய முறை, தபால் மூல வாக்குகளை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் தினம் போன்றன இதன் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 5ஆம் திகதி அனைத்து மாவட்ட செயலாளர்களையும் கொழும்புக்கு அழைத்துள்ளார்.

அத்துடன், பொது தேர்தலுக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 71 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக வாக்களிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.