ரஷ்ய அரசாங்கம் ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது!
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான அதிக ஆதாரங்கள் காணப்படும் இரு சம்பவங்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
மராட் அல் நுமான் என்ற பகுதியில் உள்ள சந்தையொன்றின் மீது கடந்த வருடம் 22ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்தும் இந்த தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 109 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது தாக்குதல் ஹாஸ் என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள ஐ.நா. விசாரணை குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் 08 பெண்கள் உட்பட 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐநா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான அதிக ஆதாரங்கள் காணப்படும் இரு சம்பவங்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
மராட் அல் நுமான் என்ற பகுதியில் உள்ள சந்தையொன்றின் மீது கடந்த வருடம் 22ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்தும் இந்த தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 109 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது தாக்குதல் ஹாஸ் என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள ஐ.நா. விசாரணை குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் 08 பெண்கள் உட்பட 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐநா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo