பிரேசில் படகு விபத்தில் – 18 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் இடம்பெற்ற படகு விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காணாமல் போயுள்ளனர்.


பாரா மாகாணம், சான்டாரெம் நகரை நோக்கி ஜாரி நதியில் சென்றுகொண்டிருந்த போது படகு ஒன்று திடீரென நீருக்குள் மூழ்கியது.

இதனையடுத்து குறித்த பகுயில் சென்று கொண்டிருந்தவர்களும், பின்னர் வந்த மீட்புக் குழுவினரும் படகில் இருந்த 46 பேரை மீட்டனர்.

எனினும், நீரில் முழ்கி 18 பேர் உயிரிழந்தனர். அத்துடன், படகிலிருந்த 30 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பிரேசில் கடற்படை விசாரணை செய்து வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.